Thursday, December 25, 2014

காங்கிரசும் பா.ஜ.க வும் ஒன்னும் அறியாதவன் வாயில மண்ணு !?

காங்கிரசும் பா.ஜ.க வும் ஒன்னும் அறியாதவன் வாயில மண்ணு !?

மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் இருவருக்கும் பாரத ரத்னா விருதுகள். முதற்கண் வாழ்த்துக்கள்.

இந்த பரந்த தேசத்தில் வ.உ.சிதம்பரனாரும், நேதாஜியும் இந்துக்கள் இல்லையா ?

இல்லை அப்படி நபர்கள் இங்கு யாரும் வாழ்ந்தது இல்லையா ?

யாரையோ முட்டாளாக்க எங்கோ விளையாடுகிறார்கள்.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போல உள்ளது.

உலக வரலாற்றில் சிதம்பரனாரும், நேதாஜியும்

* பொருளாதார யுத்தம் புரிந்த முதல் நபர் (கப்பலோட்டிய எம் தமிழன்)

* வெள்ளைக்கார சிப்பாய்களுக்கு சிம்ம சொப்பனமாய் ஆயுதங்கள் அதிகமற்ற காலத்தில் படை திரட்டி மாபெரும் யுத்தம் கண்டவர் நேதாஜி

இதெல்லாம் சாதனை இல்லை. இவர்களெல்லாம் இந்துக்களும் இல்லை என்று கூறினால் கூட சந்தேகம் இல்லை.

No comments: